ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பசங்க படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோர், சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்து கொண்டார். இதில் பிரீத்தி, கிஷோரை விட நான்கு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இந்த அவசர திருமணம் எதற்காக என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கிஷோர் - பிரீத்தி இருவரும் இதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளனர்.
பிரீத்தியின் தந்தைக்கு கடந்த 4 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மகளின் திருமணத்தை சீக்கிரம் பார்ப்பதற்கு ஆசைப்பட்டுள்ளார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றவே அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும், இல்லையேல் தனது 31வது வயதில் தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கிஷோர் விளக்கமளித்துள்ளார்.