தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் தமிழ்த் தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும் என சில நடிகர்களே குரல் கொடுப்பார்கள். ஆனால், அவர்களே பேசியதற்கு மாறாக தமிழ்த் தயாரிப்பாளர்களைப் புறக்கணித்து அடுத்த மொழி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர் தற்போது தெலுங்குத் தயாரிப்பாளர்களின் படங்களில்தான் நடித்து வருகிறார்கள். விஜய் நடித்து வரும் 'வாரிசு', தனுஷ் நடித்து வரும் 'வாத்தி', சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான்.
அவர்களது வரிசையில் அடுத்து சூர்யாவும் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. சிறுத்தை சிவா இயக்க உள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்நிறுவனம் தெலுங்கில் பிரபாஸ் நடித்த 'சாஹோ, ராதேஷ்யாம்' உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்ட நடிகர்களைப் போல இயக்குனர்கள் ஷங்கர், லிங்குசாமி, வெங்கட்பிரபு, சமுத்திரக்கனி ஆகியோரும் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு படங்களை இயக்கி வருகிறார்கள்.