சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ரசிகர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய இந்த நாவலை படமாக்கும் முயற்சி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது நடைபெற்றது. ஆனாலும் இத்தனை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் மூலமாக அந்த நாவலுக்கு திரை வடிவம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்தினம் பேசும்போது, நானே கடந்த 30 வருடங்களில் மூன்று முறை இந்த படத்தை படமாக்க முயற்சி செய்து இப்போதுதான் அதை சாதித்துள்ளேன். இதற்கு முன்னதாக நடிகர் எம்.ஜி.ஆர் இந்த படத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போதே அவர் உருவாக்கி இருந்திருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதை நாங்கள் உருவாக்க வேண்டும் என்பதற்காக விட்டு வைத்து விட்டார் என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்.
அது மட்டுமல்ல எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க வேண்டும் என்று தான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அவர் இந்த படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினார் என்கிற தகவல் பற்றி பெரிய அளவில் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் மணிரத்னம் கூறும்போது, எம்ஜிஆர் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக ஒரு தகவலை கூறியுள்ளார். தற்போது மணிரத்னம் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். அந்தவகையில் எம்ஜிஆர் நடிக்க விரும்பிய, அவரால் நடிக்க இயலாமல் போன ஒரு கதாபாத்திரம் தற்போது கார்த்திக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.