இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பார் நடித்துள்ளார். இவர் படம் முழுவதும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் படத்தில் பேசும் வசனங்கள் வெறும் இரண்டு பக்கத்தில் அடங்கிவிடும் என்று கூறியுள்ள விஜய் மில்டன் அவருக்கும் சேர்த்து படத்தில் வளவள என பேசும் கதாபாத்திரத்தில் பிருத்வி அம்பார் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது கதாபாத்திரத்திற்கு தானே தமிழில் டப்பிங் பேச பிருத்வி அம்பார் முயற்சித்தாராம். ஆனால் அது சரியாக அமையவில்லை என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் நகுலை அழைத்து அந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேச வைத்துள்ளார் விஜய் மில்டன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நகுலை தான் தனது மனதில் நினைத்து வைத்திருந்தேன் என்று கூறியுள்ளார் விஜய் மில்டன்.