தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் கடுவா. ஆக்சன் படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குனர் ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். தன் ஏரியாவில் டான் ஆக விளங்கும் பிரித்விராஜுக்கும் அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனரான விவேக் ஓபராய்க்கும் இடையே நடக்கும் பிரச்னை தான் இந்த படத்தின் கதை.
சொல்லப்போனால் இந்த இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் பிரித்விராஜ், விவேக் ஓபராயின் தாயிடம் சொன்ன ஒரு வார்த்தை காரணமாக பெரிதாகும் ஒரு பிரச்னை இவர்கள் இருவருக்கும் நீயா நானா பார்த்துவிடலாம் என்கிற ஈகோ மோதலை உருவாக்குகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான டிரைவிங் லைசன்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய படங்களும் பிரித்விராஜ் நடிப்பில் ஈகோ யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான். அந்த வகையில் ஈகோ யுத்த கதைகள் பிரித்விராஜூக்கு தொடர்ந்து வெற்றி தருகின்றன என்பது ஆச்சரியமான விஷயம் தான்.