தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில், இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதையடுத்து ரஜினி முருகன், ரெமோ, சீம ராஜா, தொடரி, அண்ணாத்த, சாணிக் காயுதம் பல படங்களில் நடித்தார். அதோடு சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான மகாநடி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது உதயநிதியுடன் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து தான் நடித்த ரெமோ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடி இருக்கிறார். அந்த வீடியோவையும் அவர் தற்போது இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் பின்னணி பாடகிகளைப் போன்றே கீர்த்தி சுரேஷ் அழகாக பாடி இருப்பதால் அதற்கு ரசிகர்கள் லைக் கொடுத்து அவரை வாழ்த்தி வருகிறார்கள்.