தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மீரா மிதுன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். ஏடாக்கூடாமாக பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். 2021ல் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் இவர் மீதும், இவரது நண்பர் சாம் அபிஷேக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் 2021, ஆகஸ்டில் இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார்.
இந்நிலையில் டில்லி நகர வீதிகளில் இவர் சுற்றி வந்துள்ளார். அவரை மீட்டு தரக்கோரி மீரா மிதுன் தாயார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் அங்குள்ள காப்பகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம், மீரா மிதுனை கைது செய்து ஆக., 11ல் ஆஜர்படுத்தும்படி மத்திய குற்றப் பிரிவு போலீஸிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.