திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்த அர்ச்சனா, பிக்பாஸ் நிகச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். அதோடு, வைகை எக்ஸ்பிரஸ், ஆடை, டாக்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் அர்ச்சனா. அப்போது அவரது மகள் சாரா அவருக்கு ஒரு கடிதம் மற்றும் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை படித்து பார்த்த அர்ச்சனை உணர்ச்சி பெருக்கால் கதறி அழுதுள்ளார். அதுகுறித்து வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டு இருக்கிறார். அதோடு, அந்த கடிதத்தில் தனது மகள் சாரா தன்னுடைய பெருமை குறித்து ஏழு பக்கங்கள் எழுதி இருப்பதாகவும், அந்த கடிதத்தை படித்ததும் தான் ஆனந்த கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் தொகுப்பாளினி அர்ச்சனா.