கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பிரபல பெண் கானா பாடகரான இசைவாணி சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும், அவரை பற்றிய தனிப்பட்ட விவகாரங்கள் எதுவும் முதலில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் இசைவாணியை பலரும் அறிவர். இசைவாணிக்கு முதலில் திருமணம் ஆகியிருந்த நிலையில், அவர் தனது கணவரை சில மாதங்களுக்கு முன் விவகாரத்து செய்திருந்தார். இசைவாணி தனது விவகாரத்து குறித்து பிக்பாஸில் பாவ்னி ரெட்டியிடம் பகிர்ந்திருந்தார். ஆனால், அவர்கள் பிரிந்ததற்கான காரணம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இசைவாணி அளித்துள்ள பேட்டியில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 'கானா பாடல் பாட என் வீட்டில் எனக்கு இருந்த ஆதரவு என் கணவர் வீட்டில் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் என் கணவரை விவாகரத்து செய்தேன்' என்று கூறியுள்ளார்.