இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல கானா பாடகியான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் கூட பிரபலமானார். இசைவாணியில் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை சதீஷ் என்ற கானா பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இசைவாணி தற்போது முன்னாள் கணவர் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், 'சதீஷ் என்னுடைய பெயரில் போலி சமூக வலைத்தள கணக்கை தொடங்கி மோசடி செய்து வருகிறார். என் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியுள்ளார். இதை தட்டிக்கேட்டால், அப்படிதான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் என தகாத வார்த்தைகளில் திட்டுவதோடு, நீ கச்சேரிக்கு செல்லும்போது உன் மீது ஆசிட் வீசுவேன். கொலை செய்வேன் என மிரட்டுகிறார்' என்று அதில் தெரிவித்துள்ளார்.