சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பாவனி தனது திருமண வாழ்வு குறித்து வருத்தத்துடன் பேச, அப்போது இசைவாணி தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த கதையை சொல்லி ஆறுதலாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வார எலிமினேஷன் நாமினேஷனில் இசைவாணியின் பெயர் வந்துள்ளது. அந்த அளவிற்கு சக போட்டியாளர்கள் விரும்பாத ஒரு நபராக இசைவாணி மாறியுள்ளார். ஆனால், அதேசமயம் ரசிகர்கள் மத்தியில் இசைவாணிக்கு நல்ல மரியாதையும் ஆதரவும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் 'கதை சொல்லட்டுமா' டாஸ்க்கில் இசைவாணி சொல்லாத அவரின் மற்றொரு சோகக்கதையை இப்போது சொல்லியுள்ளார். சக போட்டியாளர்களில் ஒருவரான பாவனி தனது திருமணம் வாழ்க்கை குறித்து கண்ணீர் சிந்த பேசினார். அப்போது இசைவாணி 'நான் ஒரு கானா பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். சில ஆண்டுகளில் நாங்கள் பிரிந்து விட்டோம். நான் இப்போது பெற்றோருடன் வசித்து வருகிறேன்' என இசைவாணி தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த கதையை கூறினார்.
இந்த சோகக்கதையை கேட்ட அவரது ரசிகர்கள் இசைவாணியின் வாழ்வில் இவ்வளவு கஷ்டமா? என மிகவும் வருத்தமடைந்து வருகின்றனர். தற்போது நாமினேஷனில் இருக்கும் இசைவாணி போட்டியாளர்களின் ஆதரவை பெறாவிட்டாலும், ரசிகர்களின் மனதை வென்று போட்டியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.