ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத்தில் விர்ஜின் மற்றும் ஸ்வீட் ஹார்ட் என இரண்டு குறும்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் கிரிஸ்டோ டோமி. ஒரு போட்டியில் இவர் எழுதிய உள்ளொழுக்கம் என்கிற ஸ்கிரிப்ட் அந்த போட்டியின் நடுவர்களாக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கான் மற்றும் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோரால் பாராட்டப்பட்டு முதல் பரிசையும் தட்டிச்சென்றது. தற்போது அந்த கதையை 'உள்ளொழுக்கு' என்கிற பெயரில் படமாக இயக்கி உள்ளார் கிரிஸ்டோ டோமி.
இந்த படத்தில் நடிப்புக்கு சவால் விடும் இரண்டு நடிகைகளான ஊர்வசியும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த கதையை கேட்டதுமே பார்வதி உடனே நடிப்பதற்கு சம்மதித்து விட்டாராம். இந்தநிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான உத்தம வில்லன் படத்தில் ஊர்வசியும், பார்வதியும் நடித்திருந்தாலும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.