சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டன. இதனைத் தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் தனது 61 வது படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் சுரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த படத்தின் பூஜையின்போது அடுத்தபடியாக கமல் நடிக்கும் படத்தை தான் இயக்கப் போவதை உறுதிப்படுத்தி இருக்கிறார் ரஞ்சித். அந்த படத்திற்கான கதையை ஏற்கனவே கமலிடத்தில் அவரது பிறந்தநாளின்போதே சொல்லி ஓகே பண்ணி விட்டநிலையில், விக்ரமின் 61வது படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் கமல் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.