'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

அமரர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலுக்கு 30 வருட பெரும் முயற்சிக்கு பிறகு திரை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். சோழர்கால வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை அமரர் கல்கி எழுதியது என்றாலும் சோழர்களின் வரலாற்றை மணிரத்னம் ஆய்வு செய்து இந்த படத்தின் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்.
அதே சமயம் இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் நெற்றியில் நாமம் அணிந்திருப்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது வழக்கறிஞர் செல்வம் என்பவர் இது குறித்து மணிரத்தினம் மீதும் விக்ரம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், சோழர்கள் நெற்றியில் நாமம் அணிவதில்லை என்றும் அவர்களது கதாபாத்திரத்தை இதில் தவறாக சித்தரித்துள்ளார்கள் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர் இந்த படத்தை தனக்கு பிரத்யேக காட்சி ஒன்றை திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் அதில் வேறு ஏதேனும் காட்சிகள் இதுபோன்ற இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே இந்த படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம் விக்ரம் நடித்துள்ள கரிகாலன் கதாபாத்திரம் ஒரு மாவீரன் மற்றும் இளவரசன் கதாபாத்திரம். அவர் போருக்கு கிளம்பும்போது வெற்றி திலகமாக குங்குமம் தரித்து செல்வது போன்று தான் அவரது புகைப்படம் இருக்கிறது. இதில் ஏன் குறை கண்டுபிடிக்கிறார்கள் என்று பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர வாசகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.