ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே நேர்மையான படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள். அவர்களைப் போலவே சில நடிகர்களும் இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களது இமேஜ் தான் முக்கியம், வசூல் தான் முக்கியம் என்ற நினைப்புடனேயே இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் உள்ள நடிகர்களில் ரஜினிகாந்த் 70 வயதைக் கடந்தவர். கமல்ஹாசன் 70 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். அஜித் 50 வயதைக் கடந்தவர், விஜய் 50 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். இவர்கள் அனைவருமே தங்கள் வயதை விட பாதி வயது குறைந்தவர்களுடன்தான் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் 50 வயது ஹீரோக்கள் கல்லூரி மாணவர்களாக நடித்ததைப் போலத்தான் இதுவும் பொருத்தமற்ற ஒரு விஷயம். திரையிலேயே இவர்களது வயது தெரிந்துவிடுகிறது. அப்படியிருக்கும் போது மிகவும் வயது குறைந்த நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து திரையில் நடனமாடும் போது சிரிப்புத்தான் வருகிறது. அதிலும் காதல் காட்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
கடந்த இரண்டு நாட்களாக விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விக்ரமிற்கு வயது 56, ராஷ்மிகாவுக்கு வயது 26. இருவரது ஜோடிப் பொருத்தத்தை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. விக்ரம் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். ராஷ்மிகா சிறிய உருவம் கொண்டவர். விக்ரம், ராஷ்மிகா இருவரையும் திரையில் ஒன்றாகப் பார்த்தால் யானை பக்கத்தில் மான் இருப்பதைப் போலத்தான் இருக்கும்.
தமிழ் சினிமாவை சில இளம் இயக்குனர்கள் வேறொரு பாதையில் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். அவர் இதையெல்லாம் யோசிக்க மாட்டாரா என்ன ?.