ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
2012ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி. நல்ல நடிப்பு திறமை இருந்தாலும் அதன்பின் பெரிய அளவில் இவருக்கு படங்கள் வரவில்லை. அதேசமயம் விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகையாக தொடர்ந்து அவரது படங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தார் காயத்ரி. குறிப்பாக இந்த பத்து வருடங்களில் விஜய்சேதுபதியுடன் இணைந்து கிட்டத்தட்ட எட்டு படங்களில் நடித்துள்ளார் காயத்ரி.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் சோலோ கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மீண்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் காயத்ரி. இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் ஜோடியாக நடித்து வரும் நின்ன தான் கேஸ் கொடு என்கிற படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் தான் நடித்த படங்கள் மாதத்திற்கு ஒன்றாக வெளியாகி வருவதில் உற்சாகமாகி இருக்கிறாராம் காயத்ரி. இந்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவாரா காயத்ரி என்பது போகப் போகத்தான் தெரியும்