சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி ஏற்று இசையமைப்பாளர் இளையராஜா பதவி ஏற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ராஜ்சபா நியமன எம்பி.,யாக தேர்வானார். அவருக்கு பிரதமர், முதல்வர், திரைக்கலைஞர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில் இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்தவாரம் சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று(ஜூலை 25) ராஜ்யசபா எம்பி.,யாக பதவியேற்றுக் கொண்டார் இளையராஜா. பார்லிமென்ட்டில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்று, கடவுள் பெயரை கூறி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டில்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.