கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பிறகு நேற்றைய தினம் குக் வித் கோமாளி சீசன் 3-ன் இறுதிபோட்டி முடிந்து ஒளிபரப்பானது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, க்ரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் கலந்து கொண்டு போட்டியிட்டனர். 4 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் முதலிடத்தை பிடித்து குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. நடிகர் தர்ஷன் ரன்னர்-அப் பட்டத்தையும், அம்மு அபிராமி இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் வென்றுள்ளனர். இந்த சீசனின் ஆரம்பம் முதலே ஸ்ருதிகா அர்ஜுன் ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார். தற்போது அவர் டைட்டில் படத்தை வென்றதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.