இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பிறகு நேற்றைய தினம் குக் வித் கோமாளி சீசன் 3-ன் இறுதிபோட்டி முடிந்து ஒளிபரப்பானது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, க்ரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் கலந்து கொண்டு போட்டியிட்டனர். 4 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் முதலிடத்தை பிடித்து குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. நடிகர் தர்ஷன் ரன்னர்-அப் பட்டத்தையும், அம்மு அபிராமி இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் வென்றுள்ளனர். இந்த சீசனின் ஆரம்பம் முதலே ஸ்ருதிகா அர்ஜுன் ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார். தற்போது அவர் டைட்டில் படத்தை வென்றதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.