ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பிறகு நேற்றைய தினம் குக் வித் கோமாளி சீசன் 3-ன் இறுதிபோட்டி முடிந்து ஒளிபரப்பானது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, க்ரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் கலந்து கொண்டு போட்டியிட்டனர். 4 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் முதலிடத்தை பிடித்து குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. நடிகர் தர்ஷன் ரன்னர்-அப் பட்டத்தையும், அம்மு அபிராமி இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் வென்றுள்ளனர். இந்த சீசனின் ஆரம்பம் முதலே ஸ்ருதிகா அர்ஜுன் ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார். தற்போது அவர் டைட்டில் படத்தை வென்றதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.