தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த படங்களின் புரமோஷன் சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, அதையடுத்து தெலுங்கில் தான் நடித்த புஷ்பா, சீதா ராமம் போன்ற படங்களின் புரமோஷன் சென்னையில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், சோசியல் மீடியாவில் தெலுங்கு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்ற போது எதற்காக கலந்து கொள்ளவில்லை? என்று ஒரு ரசிகர் அவரிடம் கேட்டபோது, பல கமிட்மெண்டுகள் இருந்த காரணத்தால் அந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன். ஆனால் இப்போது தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருவதால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என என்னை சென்னையில் நடக்கும் எனது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பார்க்கப் போகிறீர்கள். நான் சொல்வதை நம்புங்கள் என்று பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.