ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தங்கர் பச்சான் இயக்கும் படத்திற்கு “கருமேகங்கள் கலைகின்றன" என பெயரிட்டுள்ளனர். இதில் முதன்மை வேடத்தில் யோகி பாபு, மம்தா மோகன்தாஸ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாரதிராஜா, கவுதம் மேனனன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும் பங்கேற்கிறார்கள்.
முந்தைய திரைப்படங்கள் போலவே இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான் தெரிவித்தார்.
கண்மணி எனும் கதைப் பாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ள பல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகி இருக்கிறார். இத்திரைப்படத்தின் மையமான பாத்திரத்தில் தான் நடிப்பதைப் பெருமையாக கருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார். மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள்.