தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
தெலுங்கில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் உப்பென்னா. விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக, தற்போது பிரபலமாகி வரும் கிரீத்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார் படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்தின் இயக்குனர் சுகுமாருடன் அமர்ந்து இவர் சீரியஸாக விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. இதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் திரைக்கதையில் இயக்குனர் சுகுமாருக்கு உதவியாக இருந்து புச்சிபாபு பணியாற்றுகிறார் என்கிற செய்தியும் வெளியானது.
இந்த தகவல் இயக்குனர் புச்சிபாபுவின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து இந்த செய்தியில் உண்மை இல்லை என உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் புச்சிபாபு, “அந்த புகைப்படத்தில் என்னுடைய படத்தின் கதை குறித்து இயக்குனர் சுகுமாருடன் நான் விவாதித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இயக்குனர் சுகுமாருக்கு திரைக்கதையில் உதவும் அளவிற்கு நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை..” என்று கூறியுள்ளார் புச்சிபாபு