இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத்பாசில் நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‛புஷ்பா'. இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் தயாராகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் படத்தை எடுக்க திரைக்கதையையும் வலுவாக்கி வருகின்றனர். அதோடு இன்னும் சில முக்கிய நடிகர்களையும் நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.
அந்தவகையில் தெலுங்கில் உப்பெனா படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி புஷ்பா படத்தின் முதல்பாகத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகினார். தற்போது இரண்டாம் பாகத்தில் அவர் வில்லனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பருத்திவீரன் பிரியாமணி இந்த படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். இப்படத்தில் அவர் ஒரு வலுவான ரோலில் கிட்டத்தட்ட வில்லி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரியாமணி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.