துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் நடிக்க ஆரம்பித்ததும் மிகவும் பிரபலமானார். 'புஷ்பா' படத்தின் வெற்றி அவருடைய மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியது.
தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்திலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்து வருகிறார். 'புஷ்பா' பட வெளியீட்டிற்கு முன்பாக 2 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா இப்போது 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். ஹிந்தியில் நடிப்பதென்றால் சம்பளம் 4 கோடியாம்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகிகளில் நயன்தாரா மட்டுமே 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு அடுத்து பூஜா ஹெக்டே 4 கோடி வரை வாங்குகிறாராம். இப்போது ராஷ்மிகாவும் 4 கோடி சம்பளத்தைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.