வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
குபேரா படத்தை அடுத்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‛தி கேர்ள் பிரண்ட்' என்ற படம் திரைக்கு வரவுள்ளது. விரைவில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிறார் ராஷ்மிகா. இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் கதாபாத்திரம் குறித்து நான் சொன்ன கருத்துக்களை ஊடகங்கள் தவறான கோணத்தில் சித்தரித்து அதை சர்ச்சையாக்கி விட்டதாக'' தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
குறிப்பாக நான் சொல்லும் சாதாரண விஷயங்களை கூட தவறாக புரிந்து கொள்வதோடு, அதை சர்ச்சையாக்க வேண்டும் என்று திட்டமிட்டே வார்த்தைளை திரித்து வெளியிடுகிறார்கள். நான் சொல்லும் கருத்துக்களை விமர்சன கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு, சோசியல் மீடியாவிலும் டிரோல் செய்கிறார்கள்.
என் கருத்துக்கள் மட்டுமின்றி அதில் அவர்களது சொந்த கருத்துகளையும் நான் சொன்னது போன்று சேர்த்து விவாதங்களுக்கு உட்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ள ராஷ்மிகா, இனிவரும் காலங்களில் ஊடங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட போகிறேன். விமர்சனங்களை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் வெளியிட மாட்டேன் என்று முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.