தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. ரஜினி ,கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார். சமீபகாலமாக தேவா திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், அவ்வப்போது பின்னணி பாடி வருகிறார். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பல படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாக பக்தி பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் தேவா, தற்போது ‛கந்த முகமே' என்ற பெயரில் ஒரு முருகன் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற இசையமைப்பாளர் தேவா அங்கு மீடியாக்களை சந்தித்தார். அப்போது, திருச்செந்தூர் முருக பெருமானுக்காக கந்த முகமே என்ற பெயரில் ஆல்பம் ஒன்றே வெளியிட்டுள்ளேன். இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கே வழங்கப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் தேவா.