பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
சென்னை: ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிற்கு, நமது தாய் நாட்டிற்கு இது 75வது சுதந்திரம். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும், சொல்லொணாப் போராட்டங்களையும், துயரங்களையும், வலிகளையும் அவமானங்களையும் அனுபவித்த லட்சக்கணக்கான மக்களுக்கும், இந்த சுதந்திரத்திற்காக தன்னலமின்றி உயிர் தியாகம் செய்த அத்தனை லட்சக்கணக்கான மக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகவும், நமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும், அந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், வீரமரணம் அடைந்தவர்கள், தலைவர்களை அவர்களைப் போற்றி பெருமை படுத்துவோம்.
ஜாதி, மதம் மற்றும் அரசியலை தாண்டி, நமது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் தேசியக்கொடியை ஏற்றி, அதன் பெருமையை நமது அடுத்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு செல்வோம். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம். நாம் வணக்கம் செலுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி பறக்கட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி நேற்றே(ஆக.,12) தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.