இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன். அந்த படத்தை தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோரை வைத்து 'கூடே' என்கிற படத்தை இயக்கினார் அஞ்சலி மேனன். முந்தைய படத்தைப்போல இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் அஞ்சலி மேனன். இந்தநிலையில் இந்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக ஒரு பேட்டியில் நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்
இதற்கு முன்னதாக அஞ்சலி மேனன் கதை எழுதி, அன்வர் ரஷீத் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நித்யா மேனன். அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேய்ஸ் படத்திலும் கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் ஜோடியாக நட்புக்காக நடித்திருந்தார் நித்யா மேனன். இந்த நிலையில் தான், அஞ்சலி மேனனின் படத்தில் தான் மீண்டும் கதாநாயகியாக நடிப்பது உறுதிப்படுத்தி உள்ளார் நித்யா மேனன்.