அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் |

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கிறார் கார்த்தி . இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி கலந்து கொண்டபோது வீடியோ மூலம் இயக்குனர் செல்வராகவன் அவரிடத்தில் சில கேள்விகளை கேட்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிப்பீர்களா? என்று அவர் கேட்டதற்கு, ஆயிரத்தில் ஒருவன் தந்த வலியே இன்னும் மாறவில்லை. அது ஆறிய பின்னர் யோசிப்போம் என்று பதில் கொடுத்தார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை குறித்து கூறினார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்த முத்து கேரக்டர் வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்துதான் உருவாக்கியதாக தெரிவித்தார். அதனால் ஏற்கனவே கார்த்தி இன்னொரு பெயரில் வந்திய தேவன் வேடத்தில் ஏற்கனவே நடித்து விட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.