கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கிறார் கார்த்தி . இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி கலந்து கொண்டபோது வீடியோ மூலம் இயக்குனர் செல்வராகவன் அவரிடத்தில் சில கேள்விகளை கேட்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிப்பீர்களா? என்று அவர் கேட்டதற்கு, ஆயிரத்தில் ஒருவன் தந்த வலியே இன்னும் மாறவில்லை. அது ஆறிய பின்னர் யோசிப்போம் என்று பதில் கொடுத்தார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை குறித்து கூறினார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்த முத்து கேரக்டர் வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்துதான் உருவாக்கியதாக தெரிவித்தார். அதனால் ஏற்கனவே கார்த்தி இன்னொரு பெயரில் வந்திய தேவன் வேடத்தில் ஏற்கனவே நடித்து விட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.