ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த வருடம் தமன்னா நடிப்பில் சீட்டிமார் மற்றும் மேஸ்ட்ரோ என இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின. தெலுங்கில் வெளியான இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் இந்த வருடம் நிச்சயமாக தமன்னாவின் வருடமாக தான் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். அந்தவகையில் கடந்து சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் தமன்னா நடிப்பில் வெளியான எப்-3 படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
சமீப காலத்தில் தமன்னாவின் படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் கூட இந்தியாவில் வெளியாக இருக்கும் ஹாலிவுட் படமான தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் ; தி ரிங்ஸ் ஆப் பவர் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது இருப்பை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வந்தார் தமன்னா.
இந்த நிலையில் ஹிந்தியில் தமன்னா நடித்துள்ள பப்ளிக் பவுன்சர் என்கிற படம் வரும் செப்-23ல் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை இப்போது துவங்கி உள்ளனர். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் மதூர் பண்டார்கருடன் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்துள்ளார் தமன்னா. இந்த படத்தில் விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு பெண் பவுன்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா.