தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'தெய்வமகள்' சீரியல் மூலம் சின்னத்திரையின் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாணி போஜன். திரைப்படங்களுக்காக வாய்ப்பு தேடி அலைந்த காலக்கட்டத்தில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் ஆப்ஷனை ஓகே செய்து நடித்து வந்தார். அதன்பின் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். தொடர்ந்து 'பகைவனுக்கு அருள்வாய்', 'கேசிநோ', 'பாயுமொளி நீ எனக்கு', 'மிரள்','தாழ் திறவாய்', 'ஊர்க்குருவி' மற்றும் 'காசிமேடு' என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இவற்றில் பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
ஆனால், ஒரு காலத்தில் இவர் சினிமாவில் நடிக்க சென்றபோது சில ஹீரோக்கள் இவரை சீரியல் நடிகை என்பதாலேயே ரிஜக்ட் செய்தனர். அப்படி மட்டுமே வாணி போஜன் பல படவாய்ப்புகளை இழந்துவிட்டார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்த வாணி போஜன் இன்று தமிழ் திரையுலகில் அதிகம் தேடப்படும் ஹீரோயினாக, பிசியாக நடித்து வருகிறார். அன்று வாணி போஜனை ரிஜக்ட் செய்த ஹீரோக்கள் இன்று அவரது திறமையையும், புகழையும் பார்த்து தங்களுடன் சேர்ந்து நடிக்குமாறு தூது அனுப்பி வருகின்றனர். ஆனால், வாணி போஜனோ அவர்களுக்கு 'நோ' சொல்லி பதிலடி கொடுத்து வருகிறாராம்.