இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாய் நடந்தது. நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய நாயகன் சிம்பு, பெற்றோருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் வைத்தார்.
அவர் கூறுகையில், ‛‛தயவு செய்து பசங்களை திருமணம் செய்ய சொல்லி பெற்றோர்கள் டார்ச்சர் பண்ணாதீங்க. அவசரப்பட்டு திருமணம் செய்த பலருடைய வாழ்க்கை பிரச்னைகளில் சிக்கியதை நாம் பார்க்கிறோம். நமக்கும் மேலே ஒருத்தர் இருக்கார். சரியான நேரத்தில் எல்லாவற்றையும் செய்வார் என்று கூறியவர், அப்பா அம்மாவை யாரும் கை விடாதீங்க என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
தொடர்ந்து பேசிய சிம்பு, நடிகர் கமலிடம் உங்களின் எந்த படத்தை நான் ரீ-மேக் செய்து நடிக்கணும் அல்லது இரண்டாம் பாகத்தில் நடிக்கணும் என்று கேட்டார். அதற்கு, ‛‛நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். ரீமேக், இரண்டாவது பாகம் எல்லாம் வேண்டாம். என்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடியுங்கள்'' என்றார் கமல்.