படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

''அனைத்து குடும்பங்களிலும் இருக்கிற, கோபத்தை மைய கருவாகக் கொண்டு 'சினம்' படம் எடுக்கப்பட்டுள்ளது'' என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'சினம்'. அருண் விஜய்க்கு ஜோடியாக, பாலக் லால்வனி நடித்துள்ளார். இப்படத்தில், அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரும் 16ல், திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள திரையரங்கில், 'சினம்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டன. இதில், நடிகர் அருண் விஜய், நடிகை பாலக் லால்வாணி பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் அருண்விஜய் கூறுகையில், ''அனைத்து குடும்பத்திலும் இருக்கிற கோபத்தைதான், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம். அதனையே கதைக் கருவாக கொண்டு, இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான கேரக்டர்தான், இந்த படத்தில் உள்ளது. சாதாரண சப்- இன்ஸ்பெக்டர். அவனுக்கும் ஒரு குடும்பம், காதல் என ஆரம்பித்து, அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. எந்த இடத்தில் அவன் கோபம் அடைகிறான் என்பதை, அழகாக இயக்குனர் அமைத்துள்ளார்,'' என்றார்.