இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சில தினங்களுக்கு முன்பு லிப்ரா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டார்கள். இது அவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். மகாலட்சுமி ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதேபோல் ரவீந்திரன் சந்திரசேகரன் மனைவியை பிரித்து வாழ்ந்து வந்தார். இப்படியான நிலையில் ரவீந்திரன், மகாலட்சுமி இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள்.
இந்த நேரத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனை, நடிகை வனிதா விஜயகுமார் மறைமுகமாக தாக்கி இருக்கிறார். பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்ட போது அதனை கடுமையாக விமர்சித்தார் ரவீந்திரன் சந்திரசேகர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே இணையத்தில் நேரலையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது வனிதா பதிவிட்டுள்ளதாவது : ‛‛மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பிசியாகவும் இருக்கிறேன். கர்மாவுக்கு திருப்பி கொடுக்க தெரியும். நான் முழுமையாக நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்திரனை தான் மறைமுகமாக தாக்கி இருக்கிறார் வனிதா என்று சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.