இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அடங்கமறு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் மாறிமாறி நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ராசி கண்ணாவும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார்.
ராஷி கண்ணா, நேற்று தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் இருப்பேன் என்றும் கூறினார். ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "வணக்கம் நண்பர்களே, எனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். ஆனால் நான் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். நன்றி!" என்று தெரிவித்துள்ளார் .
நடிகை ராஷி கண்ணா தென்னிந்திய திரைப்பட ரசிகர்களிடமிருந்து அவர் கூறிய கருத்துகளுக்காக ஆன்லைனில் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார். தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது .
இதற்கிடையில், அவர் அடுத்ததாக தமிழில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தில் நடிக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள 'யோதா' என்ற ஹிந்தி படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.