புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
பாலிவுட் நடிகையான திஷா பதானி, தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கிய லோபர் என்ற படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் பாலிவுட்டுக்கே சென்று விட்டார். அதையடுத்து தற்போது தெலுங்கு, ஹிந்தியில் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே நடித்து வரும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் திஷா பதானி . அந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42 வது படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் .
இந்த படம் குறித்து திஷா பதானி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழில் சூர்யாவுடன் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. இப்படம் சரித்திர கதையில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. இதுவரை வழக்கமான ஹீரோயின் வேடங்களில் நடித்து வந்த நான் இந்த படத்தில் முதல் முறையாக ஒரு தனித்துவமான ஹீரோயினாக நடிக்கிறேன். ஒரு மகத்தான படத்தில் மாறுபட்ட வேடத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் திஷா பதானி.