இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் இந்த மாதம் 30ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான பிரமோஷனில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சமூக வலைத்தளமான டுவிட்டரில் நடிகை த்ரிஷா, படத்தில் தன்னுடைய கதாபாத்திரமான 'குந்தவை' என பெயரை மாற்றியுள்ளார். அது போல நடிகர் விக்ரம், அவரது கதாபாத்திரமான 'ஆதித்த கரிகாலன்' எனப் பெயரை மாற்றியுள்ளார்.
மேலும், நேற்று விக்ரம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே? அப்படியே அந்த அருண் மொழியையும் இழுத்து வா!” எனப் பதிவிட்டு கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோரை டேக் செய்திருந்தார்.
த்ரிஷா அந்தப் பதிவை ரிடுவீட் மட்டும் செய்திருந்தார். விக்ரம் பதிவிற்குப் பதிலளிக்கும் விதத்தில் கார்த்தி, “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் இலங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me,” என பதிலளத்திருந்தார். இவர்களது சுவாரசியமான பதிவிற்கும், பதிலுக்கும் ரசிகர்கள் விதவிதமான கமெண்ட்டுகளைக் கொடுத்து வருகின்றனர்.
ஆதித்த கரிகாலன் தம்பியான அருள்மொழி வர்மனிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.