அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
அமைதிப்படை 2, கண்களும் கவி பாடுதே தற்போது உருவாகி வரும் பிஸ்தா, மணியார் குடும்பம் ஆகிய படங்களில் நடித்து வருபவர் மலையாள நடிகை மிருதுளா முரளி. தற்போது தெருநாய்கள் குறித்த பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மிருதுளா. சமீபத்தில் கேரள அரசு தெருவில் திரியும் வெறி பிடித்த நாய்களை கொல்வதற்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கும் செய்தி வெளியானது.
இதை கேள்விப்பட்டதும் கொந்தளித்துப்போன மிருதுளா முரளி, “பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரையும் கொன்று விடுகிறோமா என்ன? அவர்களுக்கு ஜெயில் என்கிற ஒரு இடத்தை கொடுத்து பாதுகாக்க தானே செய்கிறோம். அதேபோன்று இந்த வாயில்லா பிராணிகளை எதற்காக கொல்ல வேண்டும்? அவைகளுக்கு என தனியாக ஒரு தங்குமிடத்தை ஒதுக்கி அவற்றை பராமரிப்பதை விட்டுவிட்டு, கொல்வதற்காக அனுமதி கேட்பது மனிதாபிமானமற்ற செயல்” என்று விமர்சித்துள்ளார். மிருதுளாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.