தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மிஸ்.பெமினா டைட்டில் வென்றதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர் ரோஷினி பிரகாஷ். சகாப்தி எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த அவர் தமிழில் ஏமாளி படத்தின் மூலம் அறிமுகமானார். கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜடா படத்தில் நடித்தார்.
தற்போது விதார்த்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவர் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் படம் இது. எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். எஸ்.ஆர்.சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். துப்பறியும் த்ரில்லர் படமாக உருவாகிறது.