தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இதையடுத்து சாணிக்காயுதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க போகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன், நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அக்டோபர் 7ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது தெலுங்கு மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.