அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
சென்னையில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மற்றும் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு ரஜினியும், ஷாருக்கானும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பும், மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படி இருவரும் ஒரே ஸ்டுடியோவில் நடித்து வந்த போதும் இதுவரை அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. என்றாலும் விரைவில் விஜய்யும், மகேஷ் பாபுவும் நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய் தமிழில் நடித்துள்ள கில்லி, போக்கிரி உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.