தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ல் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன், ரகுமான் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு என குணச்சித்திர நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதில் மதுராந்தகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரகுமான் இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் டிவி தொடராக எடுக்க முயற்சி நடைபெற்றபோது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நானும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். துரதிஷ்டவசமாக அந்த முயற்சி நடக்கவில்லை. அதேசமயம் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இயக்குகிறார் என தகவல் வெளியானபோது எப்படியாவது அதில் ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைத்து விடாதா என நினைத்திருந்தேன். அதற்கேற்ற மாதிரி மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
படப்பிடிப்பின்போது நிறைய நடிகர்கள் காம்பினேஷன் கொண்ட காட்சியில் அதிக கதாபாத்திர பெயர்கள் அடங்கிய மிக நீண்ட ஒரு வசனத்தை பெயர் வரிசை மாறாமல் நடந்துகொண்டே பேசி நடிக்க வேண்டி இருந்தது. அதை நான்கே டேக்கில் பேசி முடித்ததும் சுற்றியிருந்த படக்குழுவினர் கைதட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.