இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து விக்ரம் நடித்த கோப்ரா படத்தையும் இயக்கினார். நீண்ட நாள் இந்த படம் தயாரிப்பில் இருந்தது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம் பலவித வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் மீது விக்ரம் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இதற்காக தென்னிந்தியா முழுக்க சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தினார்.
அஜய் ஞானமுத்து மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த விக்ரம், பல மேடைகளில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன். அந்த படம் விரைவில் துவங்கும் என்று அறிவித்தார். இதற்காக விக்ரம் தயாரிப்பாளரையும் தயார் செய்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கோப்ரா எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதோடு கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. 3 ஹீரோயின்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை, விக்ரமின் நடிப்பு என பல பாசிட்டிவான விஷயங்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் விக்ரம், அஜய் ஞானமுத்துவுடன் இணைய இருந்த அடுத்த படத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும், பா.ரஞ்சித் இயக்க விருக்கும் புதிய படத்திலும் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அஜய் ஞானமுத்துவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கி இழந்த இமேஜை காப்பாற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். என்கிறார்கள்.