அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
ஹாலிவுட் சினிமாவை இந்தியா நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலக அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. அடுத்து அவர் ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் இந்திய படங்களை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வதே என் இலக்கு என அறிவித்து தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இந்த படத்தின் கதை ஆப்ரிக்க காடுகள் பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ‛தோர்' மற்றும் ‛அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மகேஷ்பாபு - ராஜமவுலியின் படம் துவங்குவதற்கு முன்னரே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.