பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தென்னிந்திய நடிகைகளில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்று நம்பர் 1 இடத்தில் இருப்பவர் 'வாரிசு' கதாநாயகி ராஷ்மிகா மந்தனா. அவருக்கு 33.6 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். அதற்கடுத்து 24.2 மில்லியன் பாலோயர்களுடன் சமந்தா, 23.7 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால், 22.5 மில்லியன் பாலோயர்களுடன் ரகுல் ப்ரீத் சிங், 21.5 மில்லியன் பாலோயர்களுடன் பூஜா ஹெக்டே ஆகியோர் உள்ளார்கள்.
இவர்களில் குறிப்பிட்ட சில புகைப்பட பதிவுகளுக்கு அதிக லைக்குகளை வாங்குபவர்களில் ராஷ்மிகாவும், பூஜாவும் முன்னணியில் உள்ளார்கள். அவர்களது சில புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் லைக்குகளைக் கடந்துவிடும். இருவரில் யார் முன்னணி என்றால் அது ராஷ்மிகாதான். அவருடைய புகைப்படப் பதிவுகள் இரண்டு மில்லியன் லைக்குகளை சுலபத்தில் தொட்டுவிடுகிறது.
நேற்று இரவு கூட சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார் ராஷ்மிகா. 15 மணி நேரத்திற்குள்ளாக அந்தப் புகைப்படங்கள் இரண்டு மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது. 'வாரிசு' படமும், ஹிந்தியில் 'குட் பை' படமும் வெளிவந்துவிட்டால் ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் இன்னும் அதிகமாகி, அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம்.