துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் பிசியான நடிகையாகி உள்ளார். தற்போது அமிதாப்பச்சனுடன் 'குட் டே', ரன்பீர் கபூருடன் ‛அனிமல்', தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‛புஷ்பா -2' படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமான 'கீதாகோவிந்தம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் ‛டியர் காம்ரேட்' படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அப்போது இருந்து இருவரும் காதலிப்பதாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடனான காதல் வதந்தி குறித்த கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தபோது ‛இது ஒரு கியூட் வதந்தி' என்று கூறியுள்ளார்.