பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டிருந்தனர். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீதான ரெட்கார்ட் தடை நீக்கப்பட்டது. அதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் வடிவேலு.
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நடித்து முடித்துவிட்ட வடிவேலு தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறும் நிலையில் வருகிற நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.