தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஸ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும் படம் 'ரீ '. இசையமைப்பாளர் தினா வின் தம்பி ஹரிஜி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகி இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சுந்தர வடிவேல் கூறியதாவது: ஒரு காலத்தில் அக்கம் பக்கம் அனைவரிடமும் நாம் நன்றாகப் பேசிப் பழகினோம். தூரத்தில் உள்ள நெருங்கிய உறவினரை விட அருகில் பக்கத்தில் உள்ள எதிரியால் நமக்கு ஆதாயம் உண்டு என்று சொல்வார்கள். அந்த வகையில் இப்போது நாம் தனிமைப்பட்டு கிடக்கிறோம் .
ஒரு பத்திரிகைச் செய்தி பார்த்தேன். பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்க, தனிமையில் வாழ்ந்த ஒரு பெண்மணி தனியே சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தார். வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் இருந்திருக்கிறார். நான்கு நாட்களாக வீடு திறக்கப்படாதது அறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டுப் போய்ப் பார்த்தபோது துர்நாற்றம் வீசி இருக்கிறது. போலீஸ் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது கட்டிலில் உட்கார்ந்த நிலையிலே இறந்திருக்கிறார்.
அந்த அளவிற்குத் தனிமையில் மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படி மன நெருக்கடிக்கு ஆளாகும் டெலுஷனல் டிஸ்ஆர்டர் எனப்படும் பிரச்சினை பற்றி இந்தப் படத்தில் கூறி இருக்கிறேன். இரண்டு வீடுகளை வைத்துக்கொண்டு இந்த முழுப் படத்தை எடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு பெரிய படத்திற்கான அனைத்து நேர்த்தியுடனும் இப்படம் உருவாகி இருக்கிறது.