திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டக் காக்கா கொண்டக்காரியில் தொடங்கி பல படங்களில் பல பாடல்களை பாடியவர் சைந்தவி. ஜி.வி.பிரகாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பாடுவதை குறைத்துக் கொண்ட சைந்தவி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ரிக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை சென்னையில் தொடங்கி உள்ளார். இதற்கு சவுண்ட்ஸ் ரைட் என்று பெயரிட்டுள்ளார்.
இதன் திறப்பு விழா நடந்தது. தயாரிப்பாளர் எஸ்.தானு, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், ஹரி சரண், தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக்குநர் ஏ.எல்.விஜய், ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பிரியங்கா, ஆதித்யா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஸ்டூடியோ குறித்து சைந்தவி கூறியதாவது: இந்த ரெகார்டிங் ஸ்டுடியோவைத் துவக்க வேண்டும் என்பது எனது சில ஆண்டுகால கனவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்க முயன்றபோது, ஒரு பொல்லாத பூனையைப்போல் கொரோனா குறுக்கே வந்துவிட்டது. இறுதியில், ஒருவழியாக அந்தக் கனவு இன்று நிஜத்திற்குள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி. என்கிறார் சைந்தவி.