துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கில் காட்பாதர் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நயன்தாரா. அந்த அறிக்கையில், 'காட்பாதர் ஒரு மிகச்சிறந்த படம். சிரஞ்சீவி உடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அவர் ஒரு வைரம் போன்றவர். எப்போதுமே உற்சாகமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது ஒவ்வொரு நொடியும் அருமையான நினைவாக அமைந்தது. அதோடு அனைவரும் ரசிக்கும் நடிகரான சல்மான்கான் இந்த படத்தில் நடித்ததால் இப்படம் மேலும் வலு பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய நன்றி.
சத்ய தேவ், தான்யா போன்றவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் தமன், கேமராமேன் நீரவ் ஷா ஆகியோர் தங்களது திறமையால் இந்த படத்தை வெற்றி பெற செய்துள்ளார்கள். ஆர்.பி.சவுத்ரி மற்றும் பிரசாத் ஆகியோர் இந்த படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் அனைவருக்கும் நன்றி. காட்பாதர் படத்தை சூப்பர் ஹிட் படமாக்கிய ரசிகர்களுக்கும் எனது நன்றி என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார் நயன்தாரா.