ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ் குமார் தனது 46வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கந்தாட குடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதுதான் புனித் மரணம் அடைந்தார். அவர் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்தும், காட்சிகளை மாற்றியும் இந்த படத்தை முடித்துள்ளனர்.
இந்த படம் கர்நாட மாநிலத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பது தொடர்பான படமாக உருவாகி உள்ளது. எனவே இந்த படத்தின் டீசரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டும் என்று புனித் ராஜ்குமார் விரும்பி இருக்கிறார். இந்த தகவலை அவரின் மனைவி அஸ்வினி வெளியிட்டிருந்தார். இது மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தின் டீசரை பார்த்து விட்டு அதுகுறித்து மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
"உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அப்பு(நடிகர் புனித் ராஜ்குமார்) வாழ்கிறார். அவர் புத்திசாலித்தனமான ஆளுமை, ஆற்றல் நிறைந்தவர் மற்றும் அவர் ஒப்பற்ற திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கந்தாட குடி என்பது இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான காணிக்கையாகும். இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.