தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ் குமார் தனது 46வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கந்தாட குடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதுதான் புனித் மரணம் அடைந்தார். அவர் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்தும், காட்சிகளை மாற்றியும் இந்த படத்தை முடித்துள்ளனர்.
இந்த படம் கர்நாட மாநிலத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பது தொடர்பான படமாக உருவாகி உள்ளது. எனவே இந்த படத்தின் டீசரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டும் என்று புனித் ராஜ்குமார் விரும்பி இருக்கிறார். இந்த தகவலை அவரின் மனைவி அஸ்வினி வெளியிட்டிருந்தார். இது மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தின் டீசரை பார்த்து விட்டு அதுகுறித்து மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
"உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அப்பு(நடிகர் புனித் ராஜ்குமார்) வாழ்கிறார். அவர் புத்திசாலித்தனமான ஆளுமை, ஆற்றல் நிறைந்தவர் மற்றும் அவர் ஒப்பற்ற திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கந்தாட குடி என்பது இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான காணிக்கையாகும். இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.